‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவருமே முன்னணி நடிகர்களாக இருப்பது நடிகர் சிவகுமார் குடும்பத்தில் மட்டும்தான். சில வருடங்களுக்கு முன்னர் வரை இருவருமே பாக்ஸ் ஆபீஸில் சில சாதனைகளைப் புரிந்து வந்தார்கள். ஆனால், 'மாற்றான்' படம் சூர்யாவுக்கும், கார்த்திக்கு அடுத்தடுத்து வெளியான சில படங்கள் தோல்விப் படங்களாகவும் அமைந்து பாக்ஸ் ஆபிஸில் அவர்களுக்கு இறங்கு முகத்தைத்தான் கொடுத்தது. அதை மாற்ற மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு சூர்யா 'அஞ்சான்' படத்திலும், கார்த்தித 'மெட்ராஸ்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.
இப்போது இரண்டு படத்தையும் எப்படி அடுத்தடுத்து வெளியிடுவது என குடும்பத்தில் குழப்பம் உருவாகியிருக்கிறதாம். சூர்யா நடித்துள்ள 'அஞ்சான்' படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடுவது என்று ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள். அப்படியிருக்க 'மெட்ராஸ்' படத்தை இந்த மாதம் 18 அல்லது 25ம் தேதிகளில் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். அப்படிப் பார்த்தால் இரண்டு படங்களுக்கும் இடையில் இரண்டு வாரங்களே இடைவெளி இருக்கும். இதனால் இரண்டு படங்களுக்குமே ஏதாவது பாதிப்பு வரலாம் என நினைத்து தற்போது 'மெட்ராஸ்' படத்தை 'அஞ்சான்' படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தள்ளி வைத்துக் கொள்ளலாமா என யோசித்து வருகிறார்களாம்.
அதே சமயம் கார்த்தியின் முந்தைய இரண்டு படங்களான 'பிரியாணி, ஆல் இன் ஆல் அழகுராஜா' படங்களை இப்படி மாற்றி மாற்றி வெளியிடலாம் என முடிவெடுத்துத்தான் இரண்டையுமே தோல்விப் படங்களாக்கிவிட்டார்கள். நாம் கேள்விப்பட்ட வரையில் இப்போது அண்ணனின் 'அஞ்சான்' படத்திற்கே முன்னுரிமை கொடுத்து தம்பியின் 'மெட்ராஸ்' படத்தை தள்ளி வெளியிடலாம் என்று முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். ம்ம்ம்...அண்ணன் என்னடா தம்பி என்னடா...என்ற பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது.