போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் வந்த பிறகு பல புதுமுகங்கள் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் ஹரிகிருஷ்ணா கற்கால தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பற்றி ஒரு படம் எடுத்து வருகிறார். அதற்கு ஆறாம் வேற்றுமை என்று பெயர் வைத்திருக்கிறார். சக்திவேல் என்பவர்தான் தயாரிப்பாளர், அவர்தான் அஜய் என்ற பெயரில் ஹீரோவாகவும் நடிக்கிறார். கோபிகா என்ற மலையாள வரவு ஹீரோயினாக நடிக்கிறார். கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்துள்ளார், அறிவழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்புகள் சத்தியமங்கலம், அதிரப்பள்ளி தலக்கோனம், அரூர், தர்மபுரி பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. "பெரிய மலைச்சரிவில் வாழும் கற்கால மக்களில் ஒருவன் சிந்திக்க ஆரம்பிக்கிறான், கேள்வி கேட்கிறான். இதனால் அந்த சமூகம் வளர்ச்சி அடைகிறது. அந்த கதையை இன்றைய சமூக கதையுடன் இணைத்து வித்தியாசமான திரைக்கதை அமைத்து ஆறாம் வேற்றுமையை எடுத்து வருகிறோம். ஹாலிவுட் படமான அபோகலிப்டோ பாணியிலான கதையும் இன்றைய கதையும் இணையும் புதிய முயற்சி" என்கிறார் இயக்குனர் ஹரிகிருஷ்ணா.