போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் தீனா. அதில் அஜீத்தான் நாயகனாக நடித்தார். ஆனால் அதன்பிறகு இருவரும் இணையவில்லை. அதையடுத்து விஜயகாந்த், சிரஞ்சீவி, அமீர்கான். சூர்யா என பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய முருகதாஸ், விஜய்யை வைத்து துப்பாக்கி என்ற படத்தை இயக்கியவர் இப்போது கத்தியை இயக்கி வருகிறார்.
இந்தநிலையில், அடுத்து அவர் விஜய்-அஜீத் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்திகள் பரவியுள்ளன. அவர்கள் இருவரையும் இணைக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர் மங்காத்தா இயக்குனர் வெங்கட்பிரபுதான். ஆனால் அவர் அடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கயிருப்பதால், இப்போதைக்கு அதற்கான வாய்ப்பு அமையவில்லை.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ், அளித்துள்ள பேட்டி ஒன்றில், விஜய்-அஜீத் இருவரையும் வைத்து படம் இயக்குவது அவ்வளவு சுலபம் அல்ல. அப்படி அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்க சம்மதித்தால் அந்தப்படத்தை இயக்க நான் தயார், இரண்டே மாதங்களில் கதை ரெடி பண்ணிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
முருகதாஸின் இந்த அறிவிப்பை விஜய்-அஜீத்தை இருவரும் ஏற்றுக்கொள்வார்களா...?!