போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய் நடித்த பல ஆக்சன் படங்களின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்றது. அதிலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அவர் நடித்த தலைவா ஆகிய படங்கள் முழுக்க முழுக்க மும்பையில்தான் படமாக்கப்பட்டன. கதை மும்பை களம் என்பதால், இந்தி டயலாக் வாசனைகளும் அதிகமாக அப்படங்களில் வீசின.
இந்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் கத்தி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பத்தில் தமிழ்நாடு, ஐதராபாத், கோல்கட்டா போன்ற பகுதிகளில் நடத்தப்பட்டாலும், கதையின் களம் என்னவோ மும்பைதான். அதனால், வில்லன்களை விஜய் துரத்தி வருவது போன்ற காட்சிகளை இந்த ஏரியாக்களில் படமாக்கிய முருகதாஸ், பின்னர் மும்பையில் முகாம் போட்டு விட்டார்.
அதிலும், துப்பாக்கியில் படமாக்கிய சில முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் இந்தி ஹாலிடே படத்தின் படப்பிடிப்பையும் நடத்திய முருகதாஸ் இப்போது கத்தி படப்பிடிப்பையும் அங்கு நடத்தியுள்ளாராம. இதற்கு காரணம், அந்த பகுதியில் படமாக்கிய எந்த படங்களும் இதுவரை தோற்றதில்லையாம். அதிலும் தான் இயக்கிய துப்பாக்கி, ஹாலிடே என்ற இரண்டு படங்களும் அதற்கு சிறந்த உதாரணமாகி விட்டதால், கத்தியை அதே பகுதியில் திரும்பத்திரும்ப படப்பிடிப்பு நடத்தினாராம் முருகதாஸ். ஏற்கனவே சமீபகாலமாக சென்டிமென்ட்டுக்குள் மூழ்கிக்கிடக்கும் விஜய்யும் அதற்கு பெரிய ஆதரவு தெரிவித்தாராம்.