போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வேடப்பன் என்ற படத்தில் தமிழுக்கு அறிமுகமானவர் அருந்ததி. அதையடுத்து எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் நடித்தார். அதோடு, எஸ்.ஏ.சி மூலமே விஜய் படத்திலும் நடித்து தமிழில் நம்பர்-ஒன் நடிகையாகி விடுவேன் என்று திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார். ஆனால் அதையடுத்து அருந்ததி நடித்த படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் அவரால் விஜய்யை நெருங்ககூட முடியவில்லை.
அதனால் தனது ஆசைகளை மூட்டைகட்டி வைத்து விட்டு, கிடைக்கிற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில புது வரவு நடிகர்களுடன் நடித்தவர், சமீபத்தில் நடித்த நேற்று இன்று படத்தில் அதிரடி கவர்ச்சியை வெளிப்படுத்தி பரபரப்பாகியிருக்கிறார். இதையடுத்து சில படவாய்ப்புகள் அவரை முற்றுகையிட்டுள்ளன. என்னதான் இனி நான் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று அவர் ஸ்டேட்மென்ட் கொடுத்தாலும்கூட, அவரைத் தேடிச்சென்றிருப்பதெல்லாமே கவர்ச்சிகரமான வேடங்கள்தான்.
அதனால், இனி தனக்கு இந்த மாதிரியான வேடங்கள்தான் கிடைக்கும் என்பதை புரிந்து கொண்ட அருந்ததி, அடுத்த நமீதாவாகும் திட்டத்துடன் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இதே ரூட்டிப் போனால் சில படங்களிலேயே நமீதாவின் இடத்தை நீங்கள் எளிதில் பிடிக்கலாம். அதோடு படத்துக்குப்படம் 5 லட்சங்களை உயர்த்திக்கொண்டே போகலாம் என்று சிலர் சொன்னதையடுத்து, இன்னும் இருக்கிற சில ஆண்டுகளில் முடிந்தவரை ஆடித்தீர்த்து விடுவோம் என்று வரிந்து கட்டி நிற்கிறார் அருந்ததி.
ஆக, நேற்று இன்று படத்தில் அவர் அணிந்து நடித்த அந்த கருப்பு பனியனின் ஈரச்சுவடு இன்னும் காய்வதற்குள், மீண்டும் ஊதா பனியன், பச்சை பனியன் என்று தேடிப்புறப்பட்டு விட்டார் அருந்ததி.