தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தெலுங்குத் திரையுலகில் பிளவு ஏற்பட வாய்ப்புள்ளதாக நேற்றுதான் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஆந்திர திரைப்பட வர்த்தக சபையில் நடந்த கூட்டத்தில் மிகப் பெரும் அமளி ஏற்பட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகுக்கென தனியாக ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தக சபை உள்ளது. இதன் பொதுக்குழு கூட்டம் இரு நாட்களுக்கு நடைபெற்றுள்ளது. ஆந்திரப் பிரதேச திரைப்பட வர்த்தக சபை என்ற பெயரை தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை என பெயர் மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டத்தைக் கூட்டினார்கள். ஆனால், தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதை கடுமையாக ஆட்சேபித்தனர். அதோடு கூட்டத்திலிருந்தும் வெளியேறினர்.
பொதுவாக, தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபை என பெயர் மாற்ற அவர்கள் விரும்பவில்லை. தெலுங்கானாவுக்கென தனியாக திரைப்பட வர்த்தக சபையை உருவாக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கை குறித்து ஆந்திர திரைப்பட வர்த்தக சபை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இருந்தாலும் தெலுங்கானா உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் தங்களுக்கென தனி அமைப்பை உருவாக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
எதிர்பார்த்தபடியே தெலுங்குத் திரையுலகத்தின பிளவு ஆரம்பமாமகிவிட்டதாகத் தெரிகிறது.