போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தீபிகா படுகோனே, சோனாக்ஷி சின்ஹா வரிசையில் அடுத்தும் ஒரு இந்தி நடிகை தமிழுக்கு வருகிறார். அவர் சந்தீபா தர். இசி லைப் மெய்ன், தபாங்&2, ஹரோபந்தி, குளோபல் பாபா படங்களில் நடித்துள்ள சந்தீபா அடுத்து தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: "நான் தமிழ் படத்தில் நடிக்க இருப்பது உண்மைதான். அதற்காக அடிக்கடி சென்னை வருகிறேன். படத்தின் ரிகர்சலில் கலந்து கொள்கிறேன். தமிழும் கற்று வருகிறேன். படத்தை பற்றி இப்போது சொல்ல முடியாது. பெரிய படம், பெரிய ஹீரோ என்பதை மட்டும் சொல்ல முடியும் மற்றவற்றை அவர்களே முறைப்படி அறிவிப்பார்கள்.
சென்னை எனக்கு புதிதில்லை. நிறைய மாடலிங் ஷோ பண்ணியிருக்கிறேன். சென்னையில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். சென்னை எனக்கு இன்னொரு வீடு மாதிரி. சென்னை மக்களை ரொம்பவும் பிடிக்கும். பிற்காலத்தில் தென்னிந்தியர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டியது வந்தால் அதில் எனக்கு தயக்கம் இருக்காது" என்கிறார் காஷ்மீர் பொண்ணான சந்தீபா தர்.