ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கிய சுக்ரன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஆண்டனி. அதையடுத்து விஜய் பெயரை தன் பெயருக்கு முன்னால் சேர்த்துக்கொண்டு விஜய் ஆண்டனி ஆனார். பின்னர், நாக்கு முக்க பாடல மூலம் பரபரப்பான இசையமைப்பாளரான அவர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்திலும் மெகா ஹிட் பாடல்களை கொடுத்தார்.
இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அவருக்கு திடீரென்று நடிப்பு ஆசை ஏற்பட்டதின் விளைவாக, நான் என்ற படத்தில் நடித்தவர் இப்போது சலீம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதையடுத்து இந்தியா பாகிஸ்தான். திருடன், சைத்தான் என சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதன்காரணமாக, சலீம் படத்தோடு தான் இசையமைப்பதையும் நிறுத்திக்கொண்டுள்ள விஜய் ஆண்டனி, முழுநேர நடிகராக உருவெடுத்துளளார்.
இந்த நிலையில், நேற்று சென்னையில் நடந்த சலீம் படத்தின் ஆடியோ விழாவில், விஜய் ஆண்டனிக்கு ''இசைய தளபதி'' என்றொரு பட்டத்தை வழங்கினார் நடிகர் பார்த்திபன். ஆனால், இந்த பட்டம் குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில், சலீம் படத்திற்கு பிறகு இனிமேல் நேரம் கிடைத்தால் மட்டுமே நான் இசையமைப்பேன். இல்லையேல் என் படங்களுக்குகூட மற்றவர்கள்தான் இசையமைப்பார்கள். அடுத்து நான் நடிக்கும் இந்தியா பாகிஸ்தான் படத்திற்கும் ஒரு புதிய இசையமைப்பாளருக்குத்தான் சான்ஸ் கொடுத்திருக்கிறேன்.
மேலும், பார்த்திபன் சார் பட்டம் கொடுத்த நேரத்தில் நான் முழுநேர நடிகராகியிருக்கிறேன். அதனால், அந்த பட்டத்தை என் பெருக்கு முன்னால் சூட்டிக்கொள்ளும் நிலையில் நான் இல்லை. அதோடு பட்டப்பெயர் வைத்துக்கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்ததில்லை என்கிறார் விஜய் ஆண்டனி.