போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஒரே துறையைச்சேர்ந்தவர்கள் அதே துறைக்கு புதியவர்கள் வந்தால் அவர்களை போட்டி மனப்பான்மையுடன் பார்ப்பதுதான் வழக்கம். ஆனால், திரைத்துறையில் பாடல்கள் எழுதி வரும் கவிஞர் பிரியன், பாடல் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு முறைப்படி பாடல் எழுதுவதற்கான பயிற்சி கொடுத்து அவர்களுக்கு சினிமாவில் பாடல் எழுத வாய்ப்பும் வாங்கித்தருகிறார்.
இதுபற்றி கவிஞர் பிரியன் கூறுகையில், தமிழ்த்திரைப்பாடல் உலகில் ஒரு பாடலை எழுதி விடுவது அத்தனை சாத்தியமானதல்ல. அதற்கு மிகப்பெரிய உழைப்பும், திறமையும் மட்டுமின்றி, திரைத்துறையைச்சேர்ந்தவர்களின் அறிமுகமும் தேவை. அந்த வகையில், ஏராளமானோர் சினிமா பாடல் எழுதுவதில் திறமையும், ஆர்வமும் இருந்தும் அதை முறைப்படி செய்யத் தெரியாததோடு, அதற்கான வாய்ப்புகளை பெற முடியாமல் தேங்கிக்கிடக்கிறார்கள்.
அதனால், நல்ல திறமையானவர்களை சினிமா உலகத்துக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நான் தமிழ்த்திரைப்பாக்கூடம் என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறேன். இதில் திரைப்பாடல் எழுதுவதற்கு பட்டயப்படிப்பு உள்ளது. அதன்மூலம் பாடல் எழுதும் ஆர்வத்துடன் வருபவர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து வருகிறேன். அந்த வகையில், என்னிடம் பயிற்சி பெற்ற 25 மாணவர்களில் 5 பேருக்கு திரைப்படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பினையும் நானே வாங்கித்தந்திருக்கிறேன்.
அந்த வரிசையில், தவக்குமார் என்பவருக்கு, சேர்ந்து போலாமா படத்தில் ரெஹானாவின் இசையிலும், வினோதனுக்கு கத சொல்லப்போறோம், மதன்குமாருக்கு சாந்தன், கலியுக கண்ணதாசனுக்கு கூட்டாளி, சந்துருவுக்கு ஏ புள்ள என்ற ஆல்பத்திலும் இப்போது பாடல் எழுதும் வாய்ப்பு வாங்கிக்கொடுத்திருக்கிறேன். இவர்கள் தவிர மற்ற மாணவர்களுக்கும் வாய்ப்புகள் கைகூடும் தருவாயில் உள்ளது.
மேலும், அடுத்தபடியாக இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தமிழ்ப்படம் கண்ணன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் இயக்கும் படம் என பலரிடமிருந்து தமிழ்திரைப்பாக் கூடத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்று சொல்லும் கவிஞர் பிரியன், முறைப்படி பாடல் எழுதக் கற்றுக்கொடுத்து, திறமையான அடுத்த தலைமுறை திரைப்பாடலாசிரியர்களை உருவாக்குவதே எனது தமிழ்த்திரைப்பாக்கூடத்தின் முக்கிய நோக்கம் என்கிறார்.