ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
களவாணி படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்து தமிழில் முன்னணி கதாநாயகி வரிசையில் இடம் பிடித்தவர் ஓவியா. தமிழ்த்திரையுலகில் தற்போது உள்ள அழகிகளில் இவரும் ஒருவர் என்கிற அளவுக்கு அழகியான ஓவியா அத்திப்பூத்தாற்போல்தான் தமிழ்ப்படங்களில் தலையைக்காட்டுகிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரித்த மதயானைக்கூட்டம் படத்தை அடுத்து, சமீபத்தில் வெளி வந்த யாமிருக்க பயமே படத்தில் கிளுகிளுப்பான வேடத்தில் நடித்திருந்தார். இதை வைத்து, ஒருவேளை ஓவியா மலையாளத்தில் பிஸி போலிருக்கிறது. அதனால்தான் எப்போதாவது இந்தப்பக்கம் வந்துவிட்டுப்போகிறார் என்று நம்ம ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். உண்மை என்ன தெரியுமா? மலையாளத்தில் ஓவியாவுக்கு படங்களே இல்லை. அவருக்கு அங்கே யாரும் சான்ஸ் தருவதே இல்லையாம்.
இதை சொல்வது யார் தெரியுமா? ஓவியாவேதான்...! மதயானைக்கூட்டம் படத்தில் மலையாளப்பெண்ணாகவே நடித்திருந்தார் ஓவியா. தமிழ்ப்படத்தில் மலையாளப்பெண்ணாக நடித்த ஓவியாவுக்கு மலையாளப்படத்தில் மலையாளம் பேசி நடிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசையாம். நடிக்க வேண்டியதுதானே...யார் தடுத்தது? மலையாளியான எனக்கு மலையாளம் பேசி என் தாய்மொழியில் நடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் மலையாளத்தில் ஏனோ எனக்கு சான்ஸ் யாரும் தரவே இல்லை. என்று வருத்தப்படுகிறார் ஓவியா.