ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலாலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டுவிட்டரில் இணைந்துள்ளாராம். இன்றைய நவநாகரீக உலகத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பேஸ்புக், டுவிட்டர் என்று சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கின்றனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் என அனைவரும் சமூக வலைதளங்களில் இணைந்து இருக்கின்றனர். அந்தவகையில், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் டுவிட்டரில் இணைந்தார். இவர் இணைந்த 24 மணிநேரத்தில் சுமார் 2.25 லட்சம் பேர் அவரை பாலோ பண்ண தொடங்கினர். தற்போது வரை சுமார் 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் அவரை பாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஜினி, டுவிட்டரில் இணைந்ததற்கு முக்கிய காரணமே பிரதமர் மோடி தானாம். தேர்தலுக்கு முன்பாக பிரசாரம் செய்வதற்காக தமிழகம் வந்தார் மோடி. அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது இருவரும் நிறைய விஷங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது தான் மோடி, ரஜினியை டுவிட்டரில் சேர சொல்லியிருக்கிறார். மோடியின் அறிவுறுத்தலாலேயே ரஜினி, டுவிட்டரில் சேர்ந்துள்ளாராம்.