போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நீ வருவாய் என ,படம் மூலம் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்தார் இயக்குனர் ராஜகுமாரன். அடுத்தடுத்த சில படங்களை இயக்கினார், கடைசியில் திருமதி தமிழ் என்ற படத்தை இயக்கி நடித்தார், சமீபத்தில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலார் ஸ்டாராகக காமெடி கலாட்டா செய்திருக்கிறார். அவன சிரிக்க சொல்லாதடா என்று தினந்தோரும் டிரைலர் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த காமடிக்கு தாவிய சோலார் ஸ்டார் ராஜகுமாரன் என்ன சொல்கிறார் என்று நீங்களே படியுங்கள்...
* எப்படி உங்களுக்கு காமெடி ரோலில் நடிக்க ஆசை வந்தது?
நான் சினிமாவுல இருக்கனும்னு ஆசைப்படுறேன், அதனால் நல்ல கதை களத்துக்கு காத்திருக்கேன். நடிக்ர ஐடியா இல்ல, என்னை தேடி எனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி இருக்கேன், இராம நாராயணன் சார் கூட ஆர்யா சூர்யா படத்தில என்னை நடிக்க கூப்டார். ,ஆனா அப்போ நான் கொஞ்சம் பயந்தேன், அவொலோ பெரிய ரோல் எல்லாம் நடிக்க முடியுமான்னு தெரிலனு , இந்த கதை, ரோல் எனக்கு பிடிச்சது, கதை கேட்டதும் நடிக்க ஒத்துகிட்டு நடிச்சேன். பலரும் என் ரோல் பார்த்துட்டு பாராட்டுறாங்க, எனக்கு போன் பண்ணி வாழ்த்து சொல்றாங்க.
* உங்க மனைவி தேவயானி படம் பார்த்தாங்களா, உங்க நடிப்பை பார்த்து என்ன சொன்னாங்க ?
என் மனைவிக்கு நான் வெளி படத்தில் நடித்தது வருத்தம். அவங்க இன்னும் படம் பார்க்கல, பெருசா கண்டுக்கல காரணம், என்னை எல்லாரும் படத்தில் கேலி கிண்டல், பண்ணி இருப்பாங்கலோன்னு பயந்தே படம் பார்க்கல. நான், என் குழந்தைகள் தியேட்டர்ல போய் படம் பார்த்துட்டோம். நம்ம தமிழ் நாட்டில மட்டும் தான் சினிமாவுக்கும், நிஜத்துக்கும் வித்யாசம் தெரிய மாட்டுது, நடிப்பை நடிப்புன்னு பார்க்க மாட்றாங்க, கொஞ்சம் சீரியஸா எடுத்துக்குறாங்க. என் மனைவியை வற்புறுத்தி படம் பார்க்க வைக்க நான் விரும்பல.
* உங்க அடுத்த பட இயக்கம் எப்போது?
குழந்தைகள் வளர ஆரம்பிச்சிட்டுடாங்க. பெரியவ 4வது, சின்னவ 2வது, ,கூடவே கொஞ்சம் பொறுப்பு அதிகமா ஆகிடுச்சு, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டேன். ஹீரோக்கள் அமையணும், நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்கணும், ஒரு படைப்பாளியா சும்மா இருக்க முடியாதே
* இப்போ சினிமா இண்டஸ்ட்ரி எப்படி இருக்கு ?
இப்போ சுத்தமா வியாபாரம் ஆகிட்டு, வியாபாரம் தெரிஞ்சா மட்டும் தான் இங்க இருக்க முடியும். என்னோட திருமதி தமிழ் படத்தை யாருமே வாங்கல, எங்க இவன் படத்தை வாங்கினா மீண்டும் படம் எடுக்க வந்திடுவானோ அப்டின்னு பயப்படுறாங்க. தமிழ் சினிமாவில் இப்போ நிலைமை சுத்தமா மாறி இருக்கு. இளைஞர்கள் தான் முதலில் அதிகமா படம் பார்க்குறாங்க. அப்புறம் படம் நல்லாயிருந்தா குடும்பத்தில இருக்கவங்க வராங்க, கேலி கூத்து, இதெல்லாம் இருக்கணும்னு எதிர் பார்க்குறாங்க. அது எனக்கு செட் ஆகுமான்னு தெரில, ஒரு நல்ல படைப்பை கொடுக்க நினைக்கிறன்
* அடுத்து எந்த படத்தில் நடிக்க போறீங்க?
இனி நடிக்கிற ஐடியா எனக்கு இல்ல, நல்ல இயக்குனர் என்ற பேர் எடுக்கிற மாதிரி இன்னும் தரமான படைப்புகளை கொடுக்க ஆசைப்படுறேன். அவ்ளோதான்.