‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இலங்கையில் நடந்த இறுதி போரில் கொல்லப்பட்ட தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் இசைப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் ஒரு படம் தயாராகியுள்ளது. கன்னட இயக்குனர் கு.கணேசன் இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியதாவது: எவ்வளவு பெரிய வன்முறையாளனாக இருந்தாலும் அவனுக்குள் இருக்கும் மனசை தட்டி எழுப்பும் வல்லமை இசைக்கு மட்டும்தான் இருக்கிறது. இசையை விட்டால் மனிதனுக்கு வேறு ஆறுதலே கிடையாது. இசை ஒரு போதும் வன்முறையை தூண்டாது. ஆனால் இப்போது இசைக்குள் வன்முறை வந்துவிட்டது. அதுதான் வேதனையாக இருக்கிறது.
இசையில் என்ன வன்முறை என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு பாட்டை கேட்கும்போது திடீரென்று தேவையில்லாமல் ஒரு குரலோ அல்லது சத்தமோ வரும் இல்லையா, அதுதான் இசை வன்முறை. அது இப்போது அடிக்கடி நடக்கிறது. எல்லோருடைய வாழ்க்கைக்கும் இசை முக்கியம். அதுவும் இன்றைய காலத்தின் வேகத்தை பார்க்கும்போது இசை இல்லாத உலகத்தை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
இவ்வாறு இளையராஜா பேசினார்.