ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
விஷாலின் சினிமா கேரியரில் மதுரை மண்வாசனையில் நடித்த பாண்டியநாடு படத்தை அவரால் மறக்கவே முடியாது. காரணம், அந்த படத்திற்கு முன்பு வரை நீண்டகாலமாக தோல்விப்படங்களாக கொடுத்து வந்த விஷால், சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த மதகஜராஜா இப்போதுவரை கிடப்பில் கிடக்கிறது. இதற்கு அவரது மார்க்கெட்டும் ஒரு காரணம்தான்.
அதனால், எப்படியாவது ஒரு மெகா ஹிட்டை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நின்று கொண்டிருந்தார் விஷால். அப்போதுதான் சுசீந்திரன் சொன்ன பாண்டியநாடு படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால், அதில் நடிக்க களமிறங்கினார். அப்படத்தை தயாரிக்க விஷாலின் அப்போதைய மார்க்கெட் கருதி யாரும் முன்வராததால், தானே அப்படத்தை தயாரித்தார் விஷால்.
அப்படி அவர் பெரிய நம்பிக்கை வைத்து நடித்த அப்படம் மெகா ஹிட்டாக அமைந்து விஷாலின் வியாபார வட்டத்தை மறுபடியும் சூடுபிடிக்க வைத்தது. அதனால் நான் சிகப்பு மனிதனை அடுத்து இப்போது ஆக்சன் பட டைரக்டர் ஹரி இயக்கும் பூஜை படத்தில நடிக்கும் விஷால், தனக்கு திருப்புமுனை தந்த சுசீந்திரனின் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறாராம்.
தற்போது, விஷ்ணுவைக்கொண்டு ஜீவா என்ற படத்தை இயக்கி வரும் சுசீந்திரன், அப்படத்தை முடித்ததும் மீண்டும் விஷாலுடன் மதுரை மண்வாசனை கதையுடன் கைகோர்க்கிறாராம்.