ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மூன்று வருடங்களுக்கு பிறகு தெனாலிராமன் மூலம் ரசிகர்களை சந்தித்த வடிவேலுவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. விளைவு, அந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அடுத்தடுத்து அவரை வைத்து படம் இயக்க முன்வந்திருந்த பலர் இப்போது பின்வாங்கி விட்டனர். அதோடு, கதை சொல்லிவிட்டு காத்திருந்த படாதிபதிகளும்கூட பைனான்ஸ் இன்னும் கைக்கு வரவில்லை. அதனால் கொஞ்சம் தாமதமாக படத்தை தொடங்கலாம் என்று நழுவி விட்டனர்.
அதனால், இவர்களையெல்லாம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் அடுத்த படத்தை வெளியிட இன்னும் மூன்று வருடமாகி விடும் என்று நினைத்த வடிவேலு, இதுவரை எடுக்காத ரிஸ்க்கை எடுக்கத் தயாராகி விட்டார். அதாவது இந்த முறை தனது சொந்த பணத்திலேயே நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
மேலும், மீண்டும் தெனாலிராமனை இயக்கிய யுவராஜ் தயாளனையே இயக்குனராக்கியிருக்கும் வடிவேலு, சிரிப்பு படம் என்று சொன்ன தெனாலிராமன் படம் சிரிப்பையே வரவழைக்கவில்லை என்று பலரும் கருத்து சொன்னதையடுத்து, ஒரு முழுநீள காமெடி படத்தை கொடுத்து விட வேண்டும் என்று தற்போது தீவிர கதை விவாதத்திலும் இறங்கியிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, இதுவும் சரித்திர காலத்து கதைதானாம். அதேசமயம், நூறு சதவிகிதம் காமெடிக்கு கியாரண்டி இருக்க வேண்டும் என்பதால், தனது சொந்த கற்பனையில் உதித்த காமெடி காட்சிகளையும் கதைக்குள் திணித்துக்கொண்டிருக்கிறாராம் காமெடி புயல்.