தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
தேனிசைத் தென்றல் தேவாவின் தம்பிகளில் ஒருவர் சம்பத். தேவா பிஸியான இசையமைப்பாளராக இருந்தபோது தன்னுடைய நான்கு தம்பிகளுக்கும் ஆளுக்கொரு வேலையைக் கொடுத்து அவர்களின் வருமானத்துக்கு வழி செய்து கொடுத்திருந்தார். அதன்படி சம்பத்துக்கு கொடுக்கப்பட்ட வேலை...கச்சேரி செய்ய தேவாவைத் தேடி வருகிறவர்களிடம் பேசி கச்சேரிகளை கன்ஃபர்ம் பண்ணுவது. அதோடு தேவாவின் கச்சேரி புரோகிராம்களை நடத்திக் கொடுப்பது.
இந்த சம்பத்தின் மகன்தான் நடிகர் ஜெய். தேவாவுக்கு படங்கள் குறைந்த பிறகு சம்பத்துக்கு வருமானமில்லாமல்போனது. அதே சமயம் அவரது மகன் ஜெய் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார். ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்பதுபோல், தேவா மூலம் கிடைத்த வருமானம் இல்லாமல்போன நேரத்தில் ஜெய் கோடிக்கணக்கில் சம்பாதிக்க ஆரம்பித்ததை எண்ணி மகிழ்ந்தார் சம்பத். நேற்று வரை டூவீலரில் வந்து கொண்டிருந்த சம்பத், இப்போது பி.எம்.டபிள்யூ காரில் செல்கிறார். மகன் ஜெய் அப்பாவுக்குக் கொடுத்த அன்புப்பரிசாம்.