‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இது நம்ம ஆளு, சிவப்பதிகாரம், தடையறத்தாக்க போன்ற படங்களில் நடித்தவர் மலையாள நடிகை மம்தா மோகன்தாஸ். புற்று நோயால் பாதிக்கப்படட இவர், அதை எதிர்த்து போராடி பூரண குணமடைந்த பின்னர் இப்போது மறுபடியும் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் படமில்லாதபோதும், தனது தாய்மொழியான மலையாளத்தில் நூர் வித் லவ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் நூர்ஜகான் என்ற வேடத்தில் நடிக்கும் மம்தா, ஒரு காட்சியில் நாயகி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பது போன்று காட்சி பண்ணப்பட்டிருந்ததாம். அதனால் அதற்காக ஒரு டூப் நடிகையை ரெடி பண்ணினாராம் இயக்குனர். ஆனால், மம்தாவோ, டூப்பெல்லாம் தேவையில்லை. நானே தென்னை மரத்தில் ஏறி தேங்காயை குலைகுலையாய் வெட்டி சாய்க்கிறேன் பாருங்கள் என்று சொல்லிக்கொண்டு மளமளவென்று மரத்தின் உச்சிக்கு சென்று விட்டாராம்.
இந்த காலத்தில், ஒரு சின்ன சுவற்றில் ஏறி குதிக்கவே டூப் கேட்கும் நடிகைகள், ஒரு கதாநாயகியே தென்னை மரத்தில் ஏறிச்சென்றதைப்பார்த்து டோட்டல் யூனிட்டே ஆச்சர்யத்தில் அசந்து நின்றார்களாம்., ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல், மரத்தின் உச்சிக்கு சென்ற, மம்தா, தனது கையில் கொண்டு சென்ற அரிவாளை எடுத்து தேங்காய் குலைகளை வெட்டி கீழே சாய்த்தாராம்.
இந்த சேதி கேரளாவில் பரவியதையடுத்து, பல நடிகர்-நடிகைகள் மம்தாவின் துணிச்சலை பாராட்டி வருகிறார்களாம்.