நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
சென்னையை சேர்ந்த டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி டிரம்ஸில் உலகில் சிறந்த இசை கலைஞராக திகழ்கிறார். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதுவரை சுமார் ஆயிரம் படங்களுக்கு டிரம்ஸ் வாசித்துள்ளார். தற்போது அரிமா நம்பி என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். சிவமணியை கவுரவிக்கும் விதமாக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆயிரம் டிரம்ஸ் கலைஞர்கள் இணைந்து ஒரே நேரத்தில் 11 நிமிடம் டிரம்ஸ் இசைத்தனர். அவர்களுடன் சிவமணியும் டிரம்ஸ் வாசித்தார். இது உலக கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட உள்ளது. தற்போது பாரத் புக் ஆஃப் ரிக்கார்ட்சில் இடம் பெற்றிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, கடம் வித்வான் விநாயக்ராம், நாதஸ்வர வித்வான் பழனிவேல், இசை அமைப்பாளர்கள் சபேஷ் முரளி, சத்யா, தஷி, பாடகர்கள் கானா பாலா, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கம் செய்திருந்தது.