‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் ஆதி மற்றும் நண்பர்கள், சென்னையை தலைமை இடமாக கொண்டு லெட்ஸ் பிரிட்ஜ் (Let's Bridge) என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி உள்ளனர். இந்த தொண்டு நிறுவனம் பல இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளனர். இது பற்றி நடிகர் ஆதியிடம் கேட்டபோது… “எங்களின் முதல் விழிப்புணர்வு முயற்சி “ முத்திரை முகாம் - வாக்கு பதிவுக்கான விழிப்புணர்ச்சி”. நாங்கள் தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் பல்வேறு இடங்களில் நடத்தியுள்ளோம். இந்த முத்திரை முகாமில் குழந்தைகள் “நம் எதிர்காலம் உங்கள் கையில் - சிந்தித்து வாக்களிப்பீர்” என்ற வாசகம் அடங்கிய முத்திரையை வாக்காளர்களின் கையில் பதிப்பார்கள். நடிகர்கள் சத்யராஜ், நாசர், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களும் எங்களுக்கு ஒத்துழைத்திருக்கிறார்கள்.” என்று சொன்னார்.