ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் அவரது 55வது படம் தொடங்கப்பட்டு விட்டபோதும், இன்னும் படத்தில் பங்குபெறும் நடிகர்-நடிகைகளைப் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடவில்லை. அதேபோல், படத்தின் டைட்டிலை அறிவிக்காத போதும், வாரணம் ஆயிரம் பாணியில் ஆயிரம் தோட்டாக்கள் என்று வைக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக அந்த யூனிட்வாசிகள் கிசுகிசுக்கிறார்கள்.
மேலும், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத், ஒரு வேடத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறாராம். அதனால் தற்போது தலைமுடியை குறைத்து போலீஸ் கட்டிங் வைத்து நடித்து வரும் அவர், தனது கையில் ஒரு காப்பு அணிந்துள்ளார். சாதாரணமாக கெளதம்மேனன் இயக்கும் எல்லா படங்களிலுமே இந்த மாதிரி ஒரு காப்பை அவரது ஹீரோக்கள் அணிந்திருப்பது வழக்கம்.
அதனால் அஜீத்துக்கும் ஒரு செண்டிமென்டிற்காக மாட்டி விட்டிருக்கிறார். மேலும், இப்படத்தை அதிக நாட்கள் இழுக்காமல் வேகமாக முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும் உடனுக்குடன் ஓ.கே பண்ணிக்கொண்டிருக்கும் அஜீத், முந்தைய படங்களை விடஇந்த படத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறார்.