ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
ஜெகோவா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுகம் தேவன் நடிக்கும் “காதல் பஞ்சாயத்து” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய இயக்குநர் பேரரசு புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். “முதல் படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களில் ரஜினி அளவிற்கு பில்ட் அப் பாடலை அறிமுகப் பாடலாக வைத்து நடிக்கிறார்கள். முதல் படத்திலேயே ரஜினி, விஜய், அஜீத் ரேஞ்சுக்கு பாடல்களை வைக்காதீர்கள் அது படம் பார்க்க வருபவர்களை எரிச்சல் ஊட்டும். கொஞ்சம் கொஞ்சம் என்று வளருங்கள். மக்கள் உங்களை ரசிக்க ஆரம்பித்தவுடன் அதுமாதிரி பாடலில் நடியுங்கள். புதுமுகங்களை வைத்து இயக்கும் இயக்குனர்களிடம் இதை வேண்டுகோளாக வைக்கிறேன்.
நான் திருப்பாச்சி படத்தை இயக்கிய போது விஜய் ஆக்ஷன் ஹீரோவாக பெரிய ஆளாகி விட்ட நேரம் “நீ எந்த ஊரு நான் எந்த ஊரு” என்ற பாடலை பதிவு செய்து போட்டுக் காட்டினோம். அதை கேட்ட விஜய் இது சரியா வருமா? இவ்வளவு பில்டப் எடுபடுமா? என்று கேட்டார். அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தேன். அவ்வளவு பெரிய நடிகரே பயந்த நேரம் உண்டு” என்றார் பேரரசு.
அஜித்தை வைத்து இயக்கிய திருப்பதி படத்தில் ஆட்டோ டிரைவராக சிறு வேடத்தில் தோன்றிய பேரரசு, அப்படத்தில் தனக்கு ரஜினி ரேன்ஜுக்கு பில்ட்அப் கொடுத்துக் கொண்டார். அதை எல்லாம் மறந்துவிட்டு இப்போது ஊருக்கு உபதேசம் செய்கிறாரே என்று விழாவுக்கு வந்தவர்கள் கமெண்ட் அடித்தனர்.
காதுல விழுதா பேரரசு சார்?