‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி தேர்தல் நடந்தது. ஓய்வுபெற்ற இரண்டு நீதிபதிகளை பார்வையாளராக கொண்டு நடந்த இந்த தேர்தலில் கேயார் தலைமையில் ஒரு அணியினரும், கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இதில் கேயார் அணி வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதனால் புதிய நிர்வாகிகள் பதவி வகிக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கலைப்புலி தாணு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம். வழக்கிற்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி கடந்த பிப்ரவரி மாதம் 19ந் தேதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதனை எதிர்த்து தாணு மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.தேவதாஸ் அடங்கிய பென்ஞ் விசாரித்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தது சரியே என்று தீர்ப்பளித்தனர்.
இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு சிக்கல் தீர்ந்தது. ஆனாலும் ஏப்ரல் 7க்கும் சிறப்பு பொதுக்குழுவை கூட்டி நம்பிக்கை ஓட்டெடுப்பில் வெற்றி பெற வேண்டும். தாணு சுப்ரீம் கோர்ட் போகாமல் இருக்க வேண்டும். இந்த இரண்டும் நடந்தால்தான் தற்போதைய நிர்வாகிகள் சிக்கல் இன்றி பணியாற்ற முடியும்.