ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
மோகன்லால் நடிப்பில் கேரளாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் த்ரிஷ்யம். இந்த படம் வெளியான பிறகு விஜய்யுடன், மோகன்லால் நடித்த ஜில்லா படம் வெளியாகயிருந்ததால், த்ரிஷ்யம் பெரிய அளவில் பரபரப்பு இல்லாமலேயே வெளியானது. சத்தமில்லாமல் திரைக்கு வந்த த்ரிஷ்யம் இப்போது பெரிய அளவில் வசூலித்துக்கொண்டிருக்கிறது.
இதனால் அப்படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகர்களே தயாராகி விட்டனர். அதோடு, மோகன்லால படங்களுக்கு இருக்கிற வரவேற்பைப்பார்த்து இப்போது அவர் நடித்த சில படங்கள் தமிழுக்கு டப்பாகி வருகின்றனர்.
இந்த நிலையில், த்ரிஷ்யம் வெற்றி பற்றி மோகன்லால் வெளியிட்டுள்ள செய்தியில், இப்படத்தின் வெற்றிக்கு படத்தின் கதை மட்டுமல்லாது, திருட்டு விசிடிக்கள் வெளியாகவில்லை என்பதே காரணம் என்கிறார். மேலும், ஆரம்பத்திலேயே வெளிவந்த இப்படத்தின் திருட்டு விசடிக்களை பின்னர் சைபர் க்ரைம் போலீசார் தடுத்து விட்டனர். அதனால் இப்போது எங்கேயும் த்ருஷ்யம் படத்தின் திருட்டு விசிடிக்கள் கிடைக்கவில்லை என்பதால், ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்த்து வருகின்றனர். அதனால், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆக, த்ருஷ்யம் படத்தின் வெற்றிக்கு காரணம் சைபர் க்ரைம் போலீசார்தான். அதனால் அவர்களுக்கு இந்த சமயத்தில் நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்கிறார் மோகன்லால்.