‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சிசிஎல் எனப்படும் 4வது செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சென்னை ரெய்னோஸ், அணியும் கர்நாடகா புல்டோசர் அணியும் சென்னை சேப்பாக்கம் கிரவுண்டில் விளையாடுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் போட்டி பெங்களூருக்கு மாற்றப்பட்டது. நேற்று இரவு நடந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கில் இறங்கியது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தனர். விக்ராந்த் 52 ரன்களும், விஷ்ணு 48 ரன்களும், பிருத்வி 46 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர் கேப்டன் விஷால் 5 ரன்னிலேயே அவுட்டானர்.
பின்னர் ஆட வந்த கர்நாடக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன் எடுத்து ஆட்டத்தை டை ஆக்கியது. இதில் பிரதீப் 65 ரன்களும், டி.ஷர்மா 38 ரன்களும், ராகுல் 22 ரன்களும் எடுத்தனர்.
சென்னை அணி வெற்றி பெற வேண்டிய நிலையில் இருந்தது. கடைசி ஓவரில் 20 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கர்நாடக அணி இருந்தது. அப்போது சாந்தனு சொதப்பலாக பந்து வீச, கர்நாட அணி வீரர்கள் வெளுத்துக்கட்ட... ஆட்டம் டையில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. அடுத்து சென்னை அணி கேரள அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டி வருகிற 9ந் தேதி கொச்சியில் நடக்கிறது.