தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
எல்லா நடிகைகளையும் போலவே காஜல்அகர்வாலுக்கும் அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற கனவு நீண்டகாலமாக இருந்து வருகிறதாம். அதனால், விஜய், சூர்யா, கார்த்தி போன்ற நடிகர்களுடன் நடித்தபடியே அஜீத் நடிக்கும் படங்களுக்கான முயற்சியினையும் எடுத்து வந்தார். அப்படி வீரம் படத்தில் அவர் நடிக்கப்போகிறார் என்றதும், அதில் நடித்துவிட திரைக்குப்பின்னால் படுதீவிரம் காட்டினார் காஜல்.
சம்பந்தப்பட்ட பட நிறுவனமும் காஜலுக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால், அவரை நடிக்க வைக்கலாம் என்ற முடிவில்தான் இருந்தார்களாம். ஆனால், அப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். தமிழைப்பொறுத்தவரை எனக்கு தமன்னாதான் செண்டிமென்ட். சிறுத்தை படத்தில் அவர் நடித்தார் அது ஹிட்டானது. அதனால் இப்போது அஜீத் படத்திலும் அவர் நடித்தால் ஹிட் உறுதியாகி விடும் என்று விடாப்பிடியாக அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம்.
அதன்காரணமாகவே, காஜல், அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பு கைநழுவிப்போனதாம். இதனால் இப்போது அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பதை விட, தன்னை அஜீத்துடன நடிக்க விடாமல் செய்த தமன்னாவை வீழ்த்த வேண்டும் என்று அவருக்கான வாய்ப்புகளை அபகரிக்கும் திரைமறைவு வேலைகளில் இறங்கியிருக்கிறார் காஜல்.
குறிப்பாக, மீண்டும் சிறுத்தையில் நடித்த கார்த்தி-தமன்னாவை ஜோடி சேர்க்க டைரக்டர் சிவா தயாராகி வருவதால், அந்த படவாய்ப்பை கார்த்தியை வைத்து தான் கைப்பற்றி விட வேண்டும் என்று களத்தில் இறங்கியுள்ளாராம் காஜல். இந்த சேதி தமன்னாவின் காதுக்கு செல்ல சீறும் பாம்பாகி விட்டாராம். பையா, சிறுத்தை என இரண்டு ஹிட் படங்களில் கார்த்தியுடன் நடித்திருக்கிறேன். ஆனால், காஜல் அவருடன் இணைந்து நடித்த அழகுராஜா தோல்வியடைந்து விட்டது என்பதை முன் வைத்து, சிறுத்தை சிவாவை ஸ்ட்ராங்காக பிடித்துக்கொண்டுள்ளாராம்.