நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
3 படத்தில் இசையமைப்பாளரான அனிருத், அதன்பிறகு எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம்(பின்னணி மட்டும்) ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் கமிட்டாகியிருந்த வாய்மூடி பேசவும் உள்பட சில சிறிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களுக்கு இசையமைக்க ஓ.கே சொல்லியிருந்த அனிருத், திடீரென் அந்த படங்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு இசையமைத்தவர், அடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களுக்காக அதிரடி டியூன்களை ரெடி பண்ணுவதில் ஈடுபட்டு வருகிறார்.
அப்படி எந்தெந்த முன்னணி ஹீரோ படங்களுக்கு இசையமைக்கிறார் என்று விசாரித்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் மற்றும் கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் என இரண்டு மெகா ஹீரோக்களின் படங்களுக்கும் அனிருத்தான் இசையமைக்கிறாராம். இந்த இரண்டு படங்களும்தான் சினிமாவில் தனது எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியவை என்று கருதும் அனிருத், இப்படங்களுக்காகத்தான் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான டியூன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம். அப்படி தான் உருவாக்கும் டியூன்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட டைரக்டர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் அபிப்ராயத்தையும் கேட்டு வருகிறாராம்.
விஜய்யின் தலைவாவுக்கு ஜி.வி.பிரகாசும், ஜில்லாவுக்கு இமானும் இசையமைத்திருந்தனர். அதேபோல் அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவும், வீரத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத்தும் இசையமைத்திருந்தனர். ஆனால் இவர்கள் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு, அஜீத், விஜய் ஆகிய இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றி அதிரடி சாதனை செய்திருக்கிறார் அனிருத்.
அவரது இந்த மின்னல் வேகம் மேல்தட்டு இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.