இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
சென்னை கடற்கரை சாலையின் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கும் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை அகற்றலாம் என சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், பி.என்.சீனிவாசன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், சென்னை, கடற்கரை சாலை, போக்குவரத்து நெரிசல் மிக்கது. காந்தி சிலைக்கு எதிரில், நடிகர் சிவாஜிக்கு சிலை அமைப்பதாக, அரசு தெரிவித்துள்ளது. சாலையின் நடுவில், சிலை அமைக்க, தடை விதிக்க வேண்டும். சிலை அமைக்க, வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டு உள்ளது. இம்மனு, 2006ல், தாக்கல் செய்யப்பட்டது. சிலை வைக்க தடை ஏதும் இல்லாததால், காமராஜர் சாலையில், காந்தி சிலை எதிரில், சிவாஜிக்கு சிலை வைக்கப்பட்டது. அப்போது, முதல்வராக இருந்த, கருணாநிதி, சிலையை திறந்து வைத்தார்.கடந்த மாதம், இம்மனு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையில், மனுத் தாக்கல் செய்த, பி.என்.சீனிவாசன், சில மாதங்களுக்கு முன், மரணமடைந்தார். அவருக்கு பதில், பி.நாகராஜன் என்பவர், மனுத் தாக்கல் செய்தார். "சிவாஜி சிலையை, அங்கிருந்து அகற்றிவிட்டு, வேறு இடத்தில் நிறுவ வேண்டும் என, கோரப்பட்டது.
இதற்கிடையே சிவாஜி சிலை அகற்ற கூடாது என தமிழ் திரையுலகினரும், சிவாஜி பேரவை அமைப்பினரும் கோரிக்கை விடுத்தனர். சில இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. மேலும் இதுதொடர்பாக நடந்த பலகட்ட விசாரணையில் சென்னை போக்குவரத்து கமிஷனர் மற்றும் தமிழக அரசு ஆகியோரது சார்பிலும் தங்களது விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் இம்மனு மீதான விசாரணை இன்று வந்தது. அதில் சிவாஜி சிலை போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதால், தற்போது சிலை இருக்கும் இடத்தை அகற்றி விட்டு வேறு இடத்திற்கு மாற்றலாம் என தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.