‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
அமலாபாலுக்கு சில இந்திப் பட வாய்ப்புகள் வந்தது. அதை அவர் மறுத்துவிட்டார். இங்கு அவருக்கு நெருக்கமான டைரக்டர் இந்திப் படங்களில் நடிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டதாக சொன்னார்கள். இப்போது அதற்கான காரணத்தை அமலா பால் சொல்லியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:
கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் இந்திப் படங்கள்ல நடிக்கவில்லை. இப்பவும் கையில் நாலு படம் இருக்கு. அதோட இந்திப்படத்துல நடிக்கிறோம்னு சும்மா பெருமைக்காக மட்டும் நடிக்க முடியாது. நல்ல கதை இருக்கணும், அதுல என்னோட கேரக்டர் பலமா இருக்கணும். அப்படி ஒரு வாய்ப்பு வந்தா நிச்சயம் நடிப்பேன். தென்னிந்தியாவிலேயே இன்னும் நிறைய சாதிக்க வேண்டியதிருக்கு. இங்கு எனக்கு பெரிய இடம் இருக்கு. அப்புறம் ஏன் இந்திக்கு போகணும்.
நிமிர்ந்து நில் ரிலீசாகும்போது எனக்கு ஒரு தனி இடம் கிடைக்கும். தனுசுடன் 3 படங்கள் நடிக்க வேண்டியது மிஸ் ஆகிடுச்சு இப்போ வேலையில்லா பட்டதாரியில அதுவும் செட் ஆகிடுச்சு. முதல்ல இங்க சாதிப்போம். அப்புறம் இந்திப் பக்கம் போகலாம் என்கிறார்.