‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் புறம்போக்கு. தற்போது குளுமனாலியில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். வேறுபட்ட இரு இளைஞர்களின் வாழ்க்கையை கொண்டு சொல்லப்படுகிற கதை. இதில் ஆர்யா பொருளாதார நிபுணராகவும், விஜய்சேதுபதி ரெயில்வே கலாசி தொழிலாளியாகவும், ஷாம் போலீஸ் அதிகாரியாகவும், கார்த்திகா கல்லூரி பேராசிரியையாகவும் நடிக்கிறார்கள். ஆர்யா ஒரு பஞ்சாப் இளைஞராக, அதுவும் தேச விடுதலைக்காக தூக்கு கயிறை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங்கின் குடும்ப வாரிசாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆர்யா பகத்சிங்காக நடிக்கிறார் என்பதை மட்டும் சொல்லிவிட்டு மேற்கொண்டு தகவல் தர மறுத்து விட்டார்கள். சென்னை கல்லூரியில் படிக்கும் ஆர்யா கல்லூரி நாடகம் ஒன்றில் பகத்சிங்காக நடிப்பதாக கதை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது இன்றுள்ள சிறை சட்டங்கள் பற்றி அவர் விஜய் சேதுபதியுடன் உரையாடுவதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியிட்ட பட விளம்பரங்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. பகத்சிங் போன்றே உடை அணிந்து அவரைப்போலவே ஆர்யா அமர்திருக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள படத்தில் நிஜமான பகத்சிங்கும், நிழல் பகத்சிங் ஆர்யாவும் உள்ளனர்.