‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசை அமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தற்போது கேரள நாட்டிளம் பெண்களுடனே என்ற பெயரில் படம் இயக்கி வருகிறார். இதில் கேரள பெண்கள் காயத்திரி, தீக்ஷிதா, அபிராமி ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் கேரள பெண்கள் காதலுக்கும், கல்யாணத்துக்கும் அலைபவர்களை போல சித்தரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து எஸ்.எஸ்.குமரனிடம் கேட்டபோது அதை மறுத்து அவர் அளித்த விளக்கம்.
இது மலையாள பெண்களை பெருமைப்படுத்தும் கதை. ஹீரோ அபியின் தந்தை ஞானசம்பந்தனுக்கு மலையாள பெண்ணுடன் காதல் இருக்கும். ஆனால் அவர் தமிழ்நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம். மலையாள கலாச்சாரத்தால் கவரப்படும் ஞானசம்பந்தம் தன் மகனுக்கு ஒரு மலையாளப் பெண்ணை திருமணம் செய்து வைக்க ஆசைப்டுகிறார். இதனால் கேரளாவுக்கு மகனை அனுப்பி வைத்து அங்கு வேலை செய்து கொண்டே ஒரு மலையாளத்து பெண்ணை காதலித்து வா என்று அனுப்பி வைக்கிறார்.
இதற்காக கேரளா செல்லும் ஹீரோ தனக்கேற்ற ஜோடியை எப்படி செலக்ட் பண்ணுகிறார். அதில் என்னென்ன குழப்பங்கள் வருகிறது என்பதுதான் கதை. காமெடியாக செல்லும் கதை. கேரள நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை விளக்கும் பாடல் ஒன்று இந்த படத்தில் இடம் பெறுகிறது. படத்தை பார்த்த கேரள தணிக்கை குழு படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்திருப்பதோடு. வரிலிலக்கிற்கும் சிபாரிசு செய்துள்ளது. தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகிறது.