போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சமீபத்தில் ரிலீசான படம் ஆப்பிள் பெண்ணே. வட்சன், ஐஸ்வர்யாமேனன், ரோஜா, தம்பி ராமய்யா நடித்திருந்தனர். ஆர்.கே.கலைமணி டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர் கே.ஜி.பாண்டியன் தயாரித்திருந்தார். அத்துடன் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
இப்போது தயாரிப்பாளர் பாண்டியன் மீது அவரது மனைவி ஸ்ரீதேவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். "1998ம் ஆண்டு பாண்டியனை திருமணம் செய்து கொண்டேன். கிளாசியா, பூஜா, சஞ்சித் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததும், அதைக் கொண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தை எடுத்தார். சினிமா தயாரிக்கும்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அது முதல் சரியாக வீட்டுக்கு வருவதில்லை. மது அருந்திவிட்டு வந்து என்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். ஆபாச சிடிக்களை பார்க்க சொல்லி வற்புறுத்துகிறார்" இப்படி அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார் ஸ்ரீதேவி.