போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் சினிமா ரசிகர்களால், நதியாவை, அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. 'பூவே பூச்சூடவா' படத்துக்கு பின், 'நதியா தோடு, நதியா வளையல், நதியா புடவை' என, அப்போதைய இளம் பெண்களிடையே, பெரிய பேஷன் புரட்சியை ஏற்படுத்தினார். திருமணத்துக்கு பின், வெளிநாட்டில் குடியேறினார். சமீபத்தில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்த அவர், ஹீரோயின்களுக்கு இணையான சம்பளம் கேட்டதால், தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால், மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். திடீரென, தெலுங்கு திரையுலகிற்கு படையெடுத்து, மகேஷ் பாபுவின் அக்காவாக, ஒரு படத்தில் நடிக்க, வாய்ப்பு பெற்றார். இதில், ஹீரோவுக்கு இணையான வேடமாம், அவருக்கு. இதையடுத்து, அதே போன்ற அக்கா வேடங்கள், தமிழிலும் கிடைக்குமா என, தீவிரமாக வலை வீசி வருகிறாராம்.