‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய்யும்-மோகன்லாலும் இணைந்து நடித்துள்ள ஜில்லா படம், விஜய் ரசிகர்களுக்கு சர்க்கரை பொங்கலாக பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலும் நடித்திருப்பதால், தமிழ்-மலையாளம் என இரண்டு மொழியிலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவிகிதம் நிறைவேற்றி விட வேண்டும் என்று பாடல் மற்றும் சண்டை காட்சிகளை மிகப்பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், படத்தில் விஜய் நாயகன் என்பதால், அவரது பெயரைத்தான் முதலில் போடுவதாக இருந்தாராம் இயக்குனர் நேசன். ஆனால், விஜய் குறுக்கிட்டு, மோகன்லால் சாரின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும். காரணம், 35 வருடமாக மலையாள சினிமாவை கலக்கிக்கொண்டிருப்பவர் அவர். ஆனால், நான் 21 ஆண்டுகளாகத்தான் சினிமாவில் இருக்கிறேன் என்றாராம்.
ஆனால், மோகன்லால் விஜய்யின் பெயரைத்தான் முதலில் போட வேண்டும் என்றாராம். கடைசியில், விஜய் சொன்னது போலவே சீனியாரிட்டியை கருத்தில கொண்டு மோகன்லாலின் பெயர்தான் ஜில்லா படத்தில் முதல் பெயராக இடம்பெறுகிறதாம். விஜய்யே முன்வந்து இதை சொன்னதால் ஜில்லா படக்குழுவே அவரை பெருமையாக பேசிக்கொண்டிருக்கிறது.