‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாரதிராஜா, இளையாராஜா, வைரமுத்து மூவர் கூட்டணி 80களில் வெற்றிக்கூட்டணியாக பவனி வந்தது. மூவரும் ஒரே காலகட்டத்தில் ஒரே மண்ணில் இருந்து சினிமாவுக்கு வந்தவர்கள் என்பது ஒரு காரணம். காலப்போக்கில் பணமும், புகழும் சேர சின்ன சின்ன ஈகோ பிரச்னைகள் பெரிதாகி பிரிந்தார்கள். நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒருவரை ஒரு மறைமுகமாக தாக்கி கொள்வார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் இளையராஜா இருதய கோளாரு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார். அவரைப்போய் பாரதிராஜாவோ, வைரமுத்துவோ பார்க்கவில்லை. நேற்று நடந்த கங்காரு பட ஆடியோ வெளியீட்டு விழாவில் வைரமுத்து தன் திடீர் பாசத்தை வெளியிட்டார்.
"நம் மண்வாசனை இசையை சினிமாவுக்கு கொண்டு வந்தவர். நம் கலாச்சாரத்தை வெள்ளை மாளிகைகளுக்கும் அப்பால் கொண்டு சேர்த்தவர். நம் தமிழ் இசையின் அடையாளம் என் ஆருயிர் நண்பன் இளையராஜா உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் பூரண உடல் நலம் பெற்று இன்னும் 30 ஆண்டுகள் தன் இசையை மண்ணுக்கு தரவேண்டும் என்ற வாழ்த்துகிறேன்" என்றார்.