100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் |
ஏழாம் அறிவு, 3 படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், அதன்பிறகு தெலுங்கு, இந்தி என்று இடம்பெயர்ந்து விட்டார். இப்போது பாலிவுட்டில் வளர்ந்து வரும் முக்கியமான நடிகைகளுள் ஸ்ருதியும் குறிப்பிடத்தக்கவர். இந்த நிலையில், அவரை மீண்டும் கோலிவுட்டுக்கு கொண்டு வர எடுக்கப்படுகிற முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடிகின்றன.
இருப்பினும், தடையறத்தாக்க பட டைரக்டர் மகிழ்திருமேனி இயக்கும் மீகாமன் படத்தில் ஸ்ருதியை, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால், இதுகுறித்து அவரை தொடர்பு கொண்டபோது, இந்தி படங்களில் தான் பிசியாக இருப்பதாக சொல்லி அந்த படத்தை தவிர்த்து விட்டாராம் ஸ்ருதி.
இந்த நிலையில், நான் சிகப்பு மனிதன் படத்திற்கு பிறகு ஹரி இயக்கத்தில், விஷால் நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன்தான் நாயகியாக நடிப்பதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை. என்றாலும், தமிழில் வெயிட்டான வேடங்கள் கிடைத்தால் மீண்டும் வருவேன் என்று ஸ்ருதி சொல்லி வந்ததால், இந்த முறை விஷாலுடன் அவர் நடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.