‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருநள்ளாறு கோவிலில் நவகிரக சாந்தி ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டிசம்பர் 21 நடந்த இந்த நிகழ்ச்சியல் நடிகர் விஜய் தன் மனைவியுடன் கலந்து கொண்டார். சென்னையில் இருந்து காரில் மனைவியுடன் சென்ற விஜய் ஹோமத்தில் பக்தி பெருக்குடன் கலந்து கொண்டார். பின்னர் சிவனையும், சனிபகவானையும் வழிபட்டார். சனிபகவானுக்கு நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டார்.
விஜய் வருகை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் விஜய்யை திடீரென கோவிலில் பார்த்த மக்கள் ஆச்சர்யத்துடன் அவரை பார்த்தனர். சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் இருந்து விட்டு காரில் சென்னை திரும்பினார். வருகிற ஜனவரி 10ந் தேதி அவர் நடித்துள்ள ஜில்லா படம் வெளிவர இருக்கிறது. எந்த பிரச்னையும் இல்லாமல் படம் ரிலீசாகி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது குடும்ப ஜோதிடர் வேண்டுகோளின்படி விஜய் திருநள்ளாறு வந்து சென்றதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.