ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இப்போதைய நடிகைகளில் எப்படி அதிகமான படங்களில் லட்சுமிமேனன் நடித்து வருகிறாரோ அதேபோல் நடிகர்களில் அதிக படங்களில் நடித்து வருபவர் விஜயசேதுபதி. தற்போது அவர் நடித்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய படங்கள் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளன. இதையடுத்து புறம்போக்கு, மெல்லிசை, வசந்தகுமாரன், இடம் பொருள் ஏவல் உள்பட அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
அவரையடுத்து இப்போது மைனா விதார்த்தும் அதிகமான படங்களில் மளமளவென்று புக்காகிக்கொண்டிருக்கிறார். மைனாவுக்கு பிறகு நடித்த முதல் இடம், கொள்ளைக்காரன் உள்பட சில படங்களின் தோல்வியால் வீழ்ச்சி கண்ட விதார்த், ஜன்னல் ஓரம் படத்தில் வித்தியாசமான கேரக்டரில் நடித்தார். நெகடீவ் ரோல் என்றாலும், விதார்த்தின் நடிப்பு பேசப்பட்டது.
அதனால், அவரது மார்க்கெட் மறுபடியும் சூடுபிடித்துள்ளது. காட்டுமல்லி, விழித்திரு, பட்டையக்கெளப்பு பாண்டியா படங்களில் ஏற்கனவே நடித்து வந்தவர், புதிதாக உலா, ஆள், நாகேஷ், அருந்தாபதி என் வரிசையாக கமிட்டாகி பிஸியாகி விட்டார்.
இதுபற்றி விதார்த் கூறுகையில், இதுவரை நான் நடித்தது வேறு. இனிமேல் நடிக்கப்போவது வேறு. அதாவது புதிய படங்களில் இதற்குமுன்பு பார்க்காத விதார்த்தை ரசிகர்கள் பார்க்கலாம். வெறும் காதல் நாயகனாக இல்லாமல், மாறுபட்ட கதை, கதாபாத்திரங்களாக செலக்ட் பண்ணி நடிக்கிறேன். அதனால், இனி வித்தியாசமான ஹீரோ என்ற இமேஜ் எனக்கு உருவாகும் என்று சொல்லும் விதார்த், ஷோலோ ஹீரோவாக மட்டுமின்றி, மல்டி ஹீரோ கதைகளில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டப்போகிறேன் என்கிறார்.