போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சினிமாவுக்கு கிளாமர் அவசியம். அதனால் கிளாமர்தான் என் சாய்ஸ் என்று ஓப்பனாக போட்டு உடைக்கிறார் நடிகை ரீமா சென். ஆயிரத்தில் ஒருவன் படத்தை முடித்து விட்டு ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் ரீமா அளித்துள்ள பேட்டியில், தமிழில் சில படங்கள் நடித்திருந்த போதிலும், எனக்கான அடையாளம் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த குறையை ஆயிரத்தில் ஒருவன் தீர்த்து வைக்கும் என்ற எதிர்பார்ப்புதான், சில படங்களின் வாய்ப்புகளை இழக்க காரணம். ஆயிரத்தில் ஒருவன் என்னை வேறு தளத்துக்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும். இந்தப் படத்துக்குப் பின்தான் அடுத்தப் படங்களில் நடிக்கலாம் என இருந்தேன். விரைவில் அடுத்த படம் பற்றிய அறிவிப்புகள் வரும் என்று கூறியுள்ளார். கிளாமர் குறித்த கேள்விக்கு, சினிமா என்றாலே கிளமார் என்பது முக்கியமான ஒன்றாகி விட்டது. யாதார்த்த சினிமாக்களில் கூட கிளாமரை எதிர்பார்க்கிறார்கள். கமர்ஷியல் சினிமாவில் நடிக்கும்போது கிளாமர் அவசியம். கிளாமராக நடிப்பதில் தவறு இருப்பதாக நினைக்கவில்லை. கதைக்குதானே கிளாமராக நடிக்கிறேன். அதனால்தான் அது என் சாய்ஸ், என்று கூறுகிறார் ரீமா.