7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
ஆபரேஷன், சிசேரியன் என பெரும்பாலான பிரசவங்களினால் கத்தி, கத்தரி போட்டு தாயிடமிருந்து சேயை பிரித்தெடுக்கும் இன்றைய இந்திய மருத்துவ உலகத்தில் கத்தியின்றி, ரத்தமின்றி (சும்மா பேச்சுக்கு...) இதுவரை சுமார் 12,000 குழந்தைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் நார்மல் டெலிவரி என்னும் சுகப்பிரசவத்தின் மூலம் இப்பூமிக்கு தருவித்து, தாயையும் சேயையும் நலமாக வீடு திரும்பவைத்துவரும் டபிள்யூ.சி.எப். எனப்படும் வுமன் அண்ட் சில்ரன் பவுண்டேஷன் 2001ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு ஹெல்த் கேராகவும், ஹாஸ்பிடலாகவும் செயல்பட்டு வரும் டபிள்யூ.சி.எப்.-ன் சென்னை தி.நகர் கிளையை நடிகை தேவயானியும், காமெடிநடிகர் தம்பி ராமைய்யாவும் சமீபத்தில் டாக்டர் ராஜசேகர் தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தனர். இவ்விழாவில் பேசிய நடிகை தேவயானி, டாக்டர் ராஜசேகர் சொன்னது போன்று பெண்கள் நிறைய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். அதுவும் 40 வயதை தாண்டிய பெண்களும் பிரசவ காலத்தில் உள்ள பெண்களும் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டு, டி.வி.யை, கேபிளை கட்செய்துவிட்டு, நடப்பது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட செயல்கள் உடம்புக்கும் பிரசவத்திற்கும் நன்மை பயக்கும். அதே மாதிரி, பருப்பு, கேஸ் என்றும் வாயு என்றும் நாம் எல்லோரும் ஒதுக்கிவைத்து விடுகிறோம். அதுமாதிரி செய்வது தவறு என்றும், பருப்பில் உள்ள புரதம் குறித்து டாக்டர் கூறினார் அல்லவா? அதை உணர்ந்து நாமெல்லாம் சோறை குறைத்துக்கொண்டு பருப்பை உண்ண வேண்டும். பரும்பு நிரம்பிய சாம்பாரை முடிந்தால் ரசம் குடிப்பது மாதிரி குடிக்க வேண்டும். அதுதான் உடம்புக்கு ஆரோக்கியம் என்றார்! அவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் தம்பி ராமைய்யாவும் உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு குறி்த்து நீண்டநேரம் உரையாற்றினார். சீரியல் நடிகை தேவயானி சீரியல் பார்க்காதீங்க என பேசியதும் காமெடி நடிகர் தம்பி ராமைய்யா சீரியாக உடற்பயிற்சி பற்றி பேசியதும் ‘டபிள்யூ.சி.எப்’ ஹாஸ்பிடல் திறப்புவிழாவில் பரபரப்பை கிளப்பிவிட்டது என்றால் பாருங்களேன்!