‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பீட்சாவை விட ஜிகர்தண்டா ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று அப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். பீட்சா படத்தின் மூலம் மக்களிடம் பாராட்டை அள்ளிய கார்த்திக் சுப்புராஜ், தனது அடுத்த படமாக ஜிகர்தண்டா என்ற படத்தை எடுத்துள்ளார்.
ஜிகர்தண்டா படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறும்போது, பீட்சாவில் பயம் மட்டுமே இருக்கும். ஆனால், ஜிகர்தண்டா முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருக்கும். பீட்சாவை விட இந்த படத்தில் ஸ்க்ரிப்ட் நாலு மடங்கு வேகமாக இருக்கும். இது வழக்கமான மதுரை படங்கள் மாதிரி இல்லாமல், விஷூவல், இசை, வசனங்கள்னு அனைத்துமே வேற மாதிரி இருக்கும். சித்தார்த்துக்கு இந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. இது வழக்கமான சாக்லேட் பாய் கதை இல்லை. நிறைய சவால்களை ஜஸ்ட் லைக் தட் சாதிக்கிற செம கேரக்டர். பீட்சாவை ஒரு வீட்டுக்குள்ளேயே வெச்சு முடிச்சுட்டோம். ஆனா, இந்த படம் முழுக்க அவுட்டோர். ஏகப்பட்ட பிரபலங்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என்றார்.