ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
இந்தி சினிமாவில் பிரபல இயக்குனராகி விட்டவர், நடிகரும், நடனமாஸ்டருமான பிரபுதேவா. இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் களவாடிய பொழுதுகள். தங்கர்பச்சான் இயக்கிய இந்த படத்தில் பிரபுதேவாவுடன் பிரகாஷ்ராஜ், பூமிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக திரைக்கு வர முடியாத சில சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படத்தை தற்போது மிகுந்த போராட்டத்திற்கு பிறகு வெளியே கொண்டு வருகிறார்கள். ஆனால், தான் நடித்ததில் வித்தியாசமான படம் என்பதால், இப்படம் எப்போது திரைக்கு வருகிறது என்று அடிக்கடி தங்கர்பச்சானுக்கு போன் போட்டு கேட்பாராம் பிரபுதேவா. இதோ, அதோ என்று சில வருடங்களாக சொல்லி வந்தவர், திடீரென்று ஒருநாள் போன் போட்டு செப்டம்பரில் படம் ரிலீஸ் ஆகிறது என்ற சந்தோச செய்தியை சொன்னாராம்.
அதையடுத்து, சமீபகாலமாக எந்த தமிழ் சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில் ஆர்வம் இல்லாமலிருக்கும் பிரபுதேவா, இந்த படத்துக்காக நேற்று சென்னையில் நடந்த அப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்டார்.
அப்போது, நான் நடித்ததில் இது வித்தியாசமான படம். நான் நடித்தேன் என்று சொல்ல முடியாது. தங்கர்பச்சான் சொன்னதை செய்தேன். வா உட்காரு, எழுந்து செல், இந்த வார்த்தையை பேசு என்பார். அதைத்தான் செய்தேன். ஆனால், ஒரு உயிரோட்டமான கதை. நடித்த எனக்கு முழுதிருப்தி கிடைத்தது.
இப்படத்தை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு எனது நடிப்பை புகழ்ந்தால், அது அத்தனையும் தங்கர்பச்சானைத்தான் சேரும் என்று சொன்ன பிரபுதேவா, இந்த களவாடிய பொழுதுகள், காதலிக்கப்போகிறவர்கள், காதலித்துக்கொண்டிருப்பவர்கள், காதலை மறக்க முடியாமல் சுமந்து திரிபவர்கள் என எல்லோருடைய மனதையும் களவாடும் என்றார்.