இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? |
காதல் கொண்டேன் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் சோனியா அகர்வால். அதன்பிறகு பல படங்களில் நடித்தவர், தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த டைரக்டர் செல்வராகவனையே பின்னர் காதலித்து திருமணமும் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே அவர்களின் காதல் கசந்து போனதையடுத்து விவகாரத்து பெற்று பிரிந்தனர்.
அதன்பிறகு, உடனடியாக அடுத்த கல்யாணம் செய்து கொண்டார் செல்வராகவன். ஆனால், சோனியா அகர்வாலோ, மீண்டும் கலைச்சேவையில் நாட்டம் கொண்டு வானம் படத்தில் ஒரு கேரக்டரில் என்ட்ரி கொடுத்தார். அதன்பிறகு ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர், இனி கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று திடீர் அறிவிப்பு வெளியிட்டதால் புதிய படங்கள் கிடைக்காமல் தடுமாறி நின்றார்.
ஆனால் ஓராண்டுக்குப்பிறகு இப்போது வேறு வழியில்லாமல் ஒரு தெலுங்கு படத்தில் குத்துப்பாட்டுக்கு நடனமாட சம்மதம் தெரிவித்துள்ளார் சோனியா அகர்வால். இதையடுத்து தமிழிலும் குத்துப்பாட்டு, வில்லி வேடம், சென்டிமென்ட் கேரக்டர் என்று எதுவாக இருந்தாலும் தயங்காமல் நடிப்பேன் என்றும் தனது அடிபொடிகள் மூலம் செய்தி வெளியிட்டுள்ளார் நடிகை.