‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜெய்-அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் சர்வானந்துக்கு ஜோடியாக நடித்தவர் நாடோடிகள் அனன்யா. அந்த படத்திற்கு பிறகு கேரளாவைச்சேர்ந்த பைனான்சியர் ஆஞ்சநேயலு என்பவரை திருமணம் செய்து கொண்ட அனன்யாவுக்கு இப்போது தமிழில் புலிவால் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால் ஏற்கனவே ஒரு மார்க்கமாக இருக்கும் அனன்யா, இப்போது இன்னும் உடல் பெருத்து ஆன்ட்டி போன்று இருக்கிறாராம். என்றாலும், புலிவால் குடும்பக்கதை என்பதால், ஓ.கேவாகி விட்டாராம்.
விமல்-பிரசன்னா என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் இந்த படத்தில் அனன்யா மட்டும் நாயகி இல்லையாம். அவருடன் விமலின் ஆஸ்தான நாயகி ஓவியா மற்றும் இனியா ஆகியோரும் உடனிருக்கிறார்களாம். ஆக. இந்த படத்தில் மூன்று கேரளத்து நடிகைகள் நடிக்கிறார்கள். இதில் ஓவியா-இனியா இருவரும் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால், அனன்யாவை மட்டும் உடல் இளைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம் பட இயக்குனர்.
அதனால், இதுநாள் வரை ஆஞ்சநேயலுவின் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு அவரைப்போலவே உப்பிப்போன அனன்யா, இப்போது தனது தாய் வீட்டுக்கு இடம்பெயர்ந்து வந்து டயட்ஸ் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளாராம். ஒரே மாதத்தில் குறைந்தது 10 கிலோவாவது குறைத்து விட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ள அனன்யா, அடுத்து மலையாளத்தில் கதாநாயகியாக நடிக்கவும் சில அபிமானிகளை நாடியுள்ளாராம்.