அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? |

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறியதால் தமிழகத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர். அதன் பிறகு கூட்டம் கூடினாலே மக்களுக்கு ஒரு பயம் வந்துவிட்டது. சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் இன்னமும் சில நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அப்படி ஒரு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்துள்ளது.
மாருதி இயக்கத்தில், பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'தி ராஜா சாப்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'சஹானா சஹானா' பாடல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள லூலு மாலில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பின் தனது காரில் ஏற நிதி அகர்வால் நடந்து வந்த போது அவரை கூட்டம் சூழ்ந்து கொண்டு நெருக்கியது. திக்கித் திணறி அந்த கூட்டத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். அதிலிருந்து எப்படியோ சிரமப்பட்டு வெளியேறி காரில் ஏறி உட்கார்ந்தார்.
காரில் உட்கார்ந்த பின் கோபமாக ஏதோ பேசியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரம்மாண்டப் பான் இந்தியா படத்தை எடுத்த தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சிக்கு சரியான விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




