ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழக அரசு நேற்று 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் திரைத்துறையினர். இவர்களின் எஸ்.ஜே.சூர்யா, லிங்குசாமி உள்ளிட்ட பலர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். பாடகி ஸ்வேதா மோகன் பேசுகையில், ''எனக்கு விருது கிடைத்தது மகிழ்ச்சி. ஆனால், என் அம்மாவும் பாடகியுமான சுஜாதா மோகனுக்கு இன்னமும் தேசியவிருது கிடைக்கவில்லையே என்ற கவலை உள்ளது. பலமுறை அது கடைசி நேரத்தில் கூட கை விட்டு போனது'' என்ற கவலையை தெரிவித்து இருக்கிறார்.
ஆனால், சாய்பல்லவி போன்றவர்கள் இன்னமும் விருது அறிவிப்பு பற்றி சோஷியல் மீடியாவில் கூட எந்த கருத்தும் பதிவிடவில்லை. 'கார்கி, அமரன்' போன்ற தமிழ் படங்களில் அவருக்கு நல்ல பெயர் என்றாலும், அவர் தெலுங்கிலேயே இப்போது கவனம் செலுத்துகிறார். தமிழில் வழக்கமான ஹீரோயின் கதைகளில் நடிக்க மறுக்கிறார். தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே பெரிய ஹீரோ படமென்றால் கூட ஓகே சொல்கிறார். மற்ற ஹீரோயின்களில் இருந்து அவர் தனித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நண்பர்களும் குறைவு. அவரை சினிமாகாரர்களே எளிதில் தொடர்பு கொள்ள முடியவில்லை. சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கூட அதிகம் தலை காண்பிப்பது இல்லை'' என்கிறார்கள்.