கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நடிகர் திலகம் சிவாஜி அபூர்வமாக சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் ஆகியவை முக்கியமான படங்கள், அதிகம் அறியப்படாத இன்னொரு படமும் உண்டு அது 'பெண்ணின் பெருமை'.
பெங்காலி எழுத்தாளர் மணிலால் பானர்ஜி எழுதிய 'ஸ்வயம்சித்தா'வை 'அர்தங்கி' என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார் புல்லையா. படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் 'பெண்ணின் பெருமை' என்ற பெயரில் இயக்கினார்.
இதில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைத்திருந்தனர்.
ஒரு ஜமீன்தாரின் முதல் தாரத்து மகனான ஜெமினி கணேசனை துன்புறுத்தும் இரண்டாவது தாரத்து மகனாக சிவாஜி நடித்தார். பல வழிகளில் அவரை துன்புறுத்தும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார்.
முன்பெல்லாம் வில்லன் என்றால் முறுக்கு மீசை, உருட்டும் கண்கள், கத்தி பேசும் வசனம் இதுதான் அடையாளமாக இருந்தது. இதனை முதலில் மாற்றியவர் சிவாஜி, சரித்திர படமான 'உத்தம வில்லனில்' ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். சமூக படங்களில் 'பெண்ணின் பெருமை'யில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான முதல் வில்லன் சிவாஜிதான்.