தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் திலகம் சிவாஜி அபூர்வமாக சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். திரும்பிப்பார், துளி விஷம், ரங்கோன் ராதா, அந்த நாள், உத்தம புத்திரன் ஆகியவை முக்கியமான படங்கள், அதிகம் அறியப்படாத இன்னொரு படமும் உண்டு அது 'பெண்ணின் பெருமை'.
பெங்காலி எழுத்தாளர் மணிலால் பானர்ஜி எழுதிய 'ஸ்வயம்சித்தா'வை 'அர்தங்கி' என்ற பெயரில் தெலுங்கில் திரைப்படமாக்கினார் புல்லையா. படம் தெலுங்கில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து தமிழில் 'பெண்ணின் பெருமை' என்ற பெயரில் இயக்கினார்.
இதில் சிவாஜி, ஜெமினி கணேசன், சாவித்திரி, நாகையா, எம்.என்.ராஜம், பிரண்ட் ராமசாமி, டி.என்.சிவதாணு உள்ளிட்ட பலர் நடித்தனர். பி.என்.ராவ், ஏ.ராமராவ் இசை அமைத்திருந்தனர்.
ஒரு ஜமீன்தாரின் முதல் தாரத்து மகனான ஜெமினி கணேசனை துன்புறுத்தும் இரண்டாவது தாரத்து மகனாக சிவாஜி நடித்தார். பல வழிகளில் அவரை துன்புறுத்தும் ஸ்டைலிஷான வில்லனாக நடித்திருந்தார்.
முன்பெல்லாம் வில்லன் என்றால் முறுக்கு மீசை, உருட்டும் கண்கள், கத்தி பேசும் வசனம் இதுதான் அடையாளமாக இருந்தது. இதனை முதலில் மாற்றியவர் சிவாஜி, சரித்திர படமான 'உத்தம வில்லனில்' ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். சமூக படங்களில் 'பெண்ணின் பெருமை'யில் ஸ்டைலிஷான வில்லனாக நடித்தார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷான முதல் வில்லன் சிவாஜிதான்.