கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

தனுஷ் இயக்கி நாயகனாக நடித்துள்ள 'இட்லி கடை' அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதனிடையே, சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக 'இட்லி கடை' இதுதான் என ஒரு கதையை உலவ விட்டுள்ளார்கள். அந்தப் பதிவையும் பலர் ஷேர் செய்து வைரலாக்கி உள்ளனர். அந்தக் கதையை படித்துப் பார்த்தால், ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா நடித்து வெளிவந்த 'மிஸ்டர் பாரத்' கதை போலவே உள்ளது.
படம் வந்த பிறகுதான் சமூக வலைத்தளங்களில் உலவும் கதை உண்மையா, பொய்யா என்பது தெரிய வரும். அதுவரை அந்தக் கதை இன்னும் அதிகமாகவே சுற்றி வரும். அந்தக் கதை இதோ,
“பரம்பரை பணக்காரர் சத்யராஜ் 5 star hotel வச்சிருக்கார். திடீர்னு அவர் ஹோட்டல்ல வர்ற ஆளுங்க கம்மி ஆகுறாங்க. என்னானு பாத்தா, இவர் ஹோட்டல் ஆப்போசிட்லயே ஒரு சின்ன பையன் இட்லி கடை போட்ருக்கார். அவர் தான் தனுஷ். ஆரம்பத்துல அடியாட்களை அனுப்பினாலும், ஒரு கட்டத்துல அப்டி அந்த இட்லில என்னதான் இருக்குனு பாக்குறதுக்கு கூட்டத்தோட கூட்டமா போய் சாப்பிடுறார். அந்த இட்லிய நாக்குல வச்சதும் 25 வருஷத்துக்கு முன்னாடி தான் ஏமாற்றிய காதலி சமைச்சு எடுத்துட்டு வந்த இட்லியும், தனுஷ் விக்கிற இட்லியும் ஒரே டேஸ்ட்ல இருக்கு.. அப்டியே தனுஷ் பின்னாடி பாத்தா இட்லி கடையில தான் பழைய காதலி போட்டோ இருக்கு. அவர் தான் தனுஷோட அம்மா.. தனுஷ் தான் புள்ளைன்னு தெரிஞ்சு தன்னோட சொத்தை தனுஷிற்கு எழுதி வச்சாரா... இரண்டாவது சம்சாரத்துக்கு பொறந்த அருண் விஜய் இத தெரிஞ்சுக்கிட்டு அவர அண்ணனா ஏத்துக்கிட்டாரா... என்கிறது தான் படத்தோட மீதி கதை...'”.