இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜமால் மற்றும் பலர் நடிப்பில் நாளை வெளியாக உள்ள படம் 'மதராஸி'.
மதராஸி என தலைப்பு வைத்துள்ளதால் இந்தப் படம் மும்பை போன்ற இடங்களில் நடக்கும் கதையோ என்ற சந்தேகம் ரசிகர்களிடம் எழுந்தது. ஹிந்தி பேசும் மக்கள் தமிழர்களை மதராஸி என்றழைப்பது வழக்கம்.
ஆனால், படத்தின் கதை தமிழகத்தில்தான் நடக்கிறதாம். வில்லன் வித்யுத் ஜமால், படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை மதராஸி என அழைப்பதால் படத்திற்கு அந்தப் பெயரை வைத்துள்ளாராம் இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.
மேலும், படத்தின் கதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “மேற்கத்திய நாடுகளில் ஒரு முக்கியமான பிரச்னை உள்ளது, அது மெல்ல மெல்ல நம் நாட்டிலும் பரவி வருகிறது. இந்தப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு நான் ஒரு கதையை எழுதினேன். இதன் தலைப்பு வித்தியாசமானது மற்றும் பார்வையாளர்களுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்று நான் உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.




