காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் சிம்பு பற்றி சில விஷயங்களை பேசியுள்ளார் டி.ராஜேந்தர். அவர் பேசுகையில் 'சிம்பு பிறப்பதற்கு முன்பே உயிருள்ளவரை உஷா வெளியாகிவிட்டது. இந்த படத்தின் மூலம் என் மனைவி தயாரிப்பாளர் ஆனார். படம் நல்ல லாபம். அதிலிருந்து அவர் என் பட தயாரிப்பாளராக அவர் இருக்கிறார். என் படங்களை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது முதல் படமான ஒரு தலை ராகத்தை வெளியிட நினைத்தேன்.
சிம்புதாான் உயிருள்ளவரை உஷாவை வெளியிடுங்க என்றார். அந்த படத்தில் இடம் பெறும் கட் அடிப்போம் பாடல் மீது அவருக்கு அவ்வளவு ஆசை. அதை இப்போது ரீமிக்ஸ் செய்து இருக்கிறார். அடுத்து சிம்பு நடித்த இது நம்ம ஆளு, காதல் அழிவதில்லை படங்களை கூட ரீ ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளோம். எனக்கு விஜயகாந்த்துக்கும் அரசியல் ரீதியாக பிரச்னை வந்தபோது சிம்புதான் பேசி சமாதானப்படுத்தினார். அதிலிருந்து அரசியல் காரணமாக, எந்த நடிகர் நட்பை முறிக்க கூடாது என முடிவு செய்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது, இந்த மண்ணில்தான் எனக்கு எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். சிம்புதான் அமெரிக்க அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தார்'' என்றார்.
சிம்பு திருமணம் குறித்து அவர் நேரடியாக பேசவில்லை. ஆனால், ''காதலுக்கு நான் எதிரி அல்ல என்று சொல்லிவிட்டு, அந்த காலத்தில் தன் படங்களின் பிலிமை தியேட்டருக்கு பெட்டிகளில் வைத்து அனுப்பும்போது அந்த பெட்டிக்குள் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன். அதை திறந்து பார்க்கும் ஆபரேட்டர் சந்தோசப்படுவார். படத்தை வாழ்த்துவார். பட பெட்டிகளில் சிம்பு கையால்தான் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன் என்றும் புது தகவல் சொன்னார்.