முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா | நிறையபேர் கைலாசம் போயிட்டாங்க, ரஞ்சிதா கைலாச போயிட்டாங்க : கஸ்தூரி | 'காந்தாரா' அவதூறு : சாமுண்டி கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க ரன்வீர் சிங்கிற்கு கோர்ட் உத்தரவு | 'நீளிரா' பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் : 'எமகாதகி' புகழ் ரூபா |

‛உயிருள்ளவரை உஷா' ரீ-ரிலீஸ் பிரஸ்மீட்டில் சிம்பு பற்றி சில விஷயங்களை பேசியுள்ளார் டி.ராஜேந்தர். அவர் பேசுகையில் 'சிம்பு பிறப்பதற்கு முன்பே உயிருள்ளவரை உஷா வெளியாகிவிட்டது. இந்த படத்தின் மூலம் என் மனைவி தயாரிப்பாளர் ஆனார். படம் நல்ல லாபம். அதிலிருந்து அவர் என் பட தயாரிப்பாளராக அவர் இருக்கிறார். என் படங்களை ரீ ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுத்தபோது முதல் படமான ஒரு தலை ராகத்தை வெளியிட நினைத்தேன்.
சிம்புதாான் உயிருள்ளவரை உஷாவை வெளியிடுங்க என்றார். அந்த படத்தில் இடம் பெறும் கட் அடிப்போம் பாடல் மீது அவருக்கு அவ்வளவு ஆசை. அதை இப்போது ரீமிக்ஸ் செய்து இருக்கிறார். அடுத்து சிம்பு நடித்த இது நம்ம ஆளு, காதல் அழிவதில்லை படங்களை கூட ரீ ரிலீஸ் செய்யதிட்டமிட்டுள்ளோம். எனக்கு விஜயகாந்த்துக்கும் அரசியல் ரீதியாக பிரச்னை வந்தபோது சிம்புதான் பேசி சமாதானப்படுத்தினார். அதிலிருந்து அரசியல் காரணமாக, எந்த நடிகர் நட்பை முறிக்க கூடாது என முடிவு செய்தேன். எனக்கு உடல்நலம் சரியில்லாமல் போனபோது, இந்த மண்ணில்தான் எனக்கு எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். சிம்புதான் அமெரிக்க அழைத்து சென்று சிகிச்சை பெற வைத்தார்'' என்றார்.
சிம்பு திருமணம் குறித்து அவர் நேரடியாக பேசவில்லை. ஆனால், ''காதலுக்கு நான் எதிரி அல்ல என்று சொல்லிவிட்டு, அந்த காலத்தில் தன் படங்களின் பிலிமை தியேட்டருக்கு பெட்டிகளில் வைத்து அனுப்பும்போது அந்த பெட்டிக்குள் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன். அதை திறந்து பார்க்கும் ஆபரேட்டர் சந்தோசப்படுவார். படத்தை வாழ்த்துவார். பட பெட்டிகளில் சிம்பு கையால்தான் 500 ரூபாயை வைத்து அனுப்புவேன் என்றும் புது தகவல் சொன்னார்.