இரண்டு பட வாய்ப்பை தவறவிட்ட அனுபமா பரமேஸ்வரன் | ரயில் பைட், ஆட்டமா தேரோட்டமா... : ‛கேப்டன் பிரபாகரன்' மலரும் நினைவில் ஆர்.கே.செல்வமணி | 'கூலி' படத்திற்கு 'ஏ' சான்றிதழ் ரத்தாகுமா ? | 'கேப்டன் பிரபாகரன்' காட்சியைக் காப்பியடித்த 'புஷ்பா 2' | ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் சாத்தியமா... : கோலிவுட் தகவல் என்ன...? | 35 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் மம்முட்டியின் ‛சாம்ராஜ்யம்' | ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பழிவாங்கும் கதையில் நடிக்கும் ஜோஜூ ஜார்ஜ் | 6 கோடியில் எடுத்து 100 கோடி வசூல் செய்த கன்னட படம் ; காந்தாராவுக்கு பின் அடுத்த சாதனை | ஆஸ்கர் புகழ் நாட்டு நாட்டு பாடகருக்கு திருமண நிச்சயதார்த்தம் | நடிகர் விஷ்ணுவர்தனின் புதிய நினைவிடத்திற்காக இலவசமாக நிலம் வழங்கிய கிச்சா சுதீப் |
மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள் படத்தில் ஆனந்தி ஹீரோயினாக நடித்தார். அடுத்து அவர் இயக்கிய மாமன்னன் படத்தில் கீர்த்திசுரேஷ் ஹீரோயின். ஆனால், இந்த படங்களில் முதலில் நடிக்க இருந்தவர் அனுபமா பரமேஸ்வரன் தானாம். அவர் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போக, இவர்கள் நடித்து இருக்கிறார்கள். இதை அனுபமாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
இப்போது விக்ரம் மகன் துருவ்வை வைத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள ‛பைசன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன் தான் ஹீரோயின். இதில் அவர் தென் மாவட்டத்து பெண்ணாக நடிப்பதாக தகவல். முதல் 2 படங்களில் வாய்ப்பை தவறவிட்ட அனுபமா 3வது படத்தில் பிடித்து இருக்கிறார். இதற்குமுன்பு தனுசுடன் கொடி, பிரதீப் ரங்கநாதனுடன் டிராகன் ஆகிய தமிழ் படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.